அணுவினும் சிறிய துகளுக்கு என்ன பெயர்?
ஓர் அணுவை நூறு பங்காக உடைத்தால் கிடைப்பது கோண். அதாவது நூறில் ஒரு பங்கு கோண். இச்சொல்லை கம்பர் கம்பராமாயணத்தில் ஓரிடத்தில் பயன்படுத்துகிறார். கடவுள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார் பாருங்கள்.
சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சத கூறிட்டகோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை
காணுதி விரைவின்; என்றான்; நன்று எனக் கனகன் சொன்னான்.
கருத்துகள்
கருத்துரையிடுக