இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எல்லாம் தெரிந்தவரைப் போல சிலர் விமர்சித்து திரிகிறார்களே, அதற்கு உங்கள் பதில் என்ன?

  அருணகிரிநாதருக்கும் வில்லிபுத்தூர் ஆழ்வாருக்கும் ஒரு நாள் போட்டி. வில்லிப்புத்தூர் யாரையும் காது அறுக்கிறவர்.  இதை தவறென்று உணர்த்தி அவரை திருத்த நினைத்த அருணகிரி ஒரு நாள் வாதப்போரில் இறங்கினார். என்னுடன் வாதப் போருக்கு வருகிறீர்களே, என் நிபந்தனை என்னவென்று தெரியுமா எனக்கேட்டார். தெரியுமே காதை அறுப்பீர்கள். போட்டி தொடங்கியது. இருவரும் மாறி மாறி வாதம் புரிந்தார்கள். ஒரு நாள் கந்தர் அந்தாதி புராணம் பாடினார் அருணகிரிநாதர்.  அதில் ஐம்பத்து மூன்று செய்யுள்களுக்கு சரியான பதில் சொல்லி வந்தார் வில்லிபுத்தூரார். ஐம்பத்து நான்காவது செய்யுளான கட்டளைக் கலித்துறையை 'த' வர்க்கத்தில் கேட்போர் திகைக்குமாறு பாடினார் அருணகிரிநாதர். அந்தச் செய்யுள் இதுதான். திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தித்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதி திதிதுதி தீதொத்ததே வில்லிபுத்தூர் ஆழ்வாருக்கு இதன் பொருள் தெரியவில்லை. காதைக் கொடுத்தார் வில்லிபுத்தூர் ஆழ்வார்.  அறுப்பாரா அருணகிரிநாதர். அவரைத் ...

விருது அமைப்பைப் புகழ்ந்து விருது பெற முடியுமா?

 ராமச்சந்திர கவிராயர் இவ்வாறு பாடுகிறார்.  கல்லாத ஒருவனைக் கற்றாய் என்றேன்  பொல்லாத ஒருவனை நல்லாய் என்றேன்  போர் முகத்தை அறியானைப் புலி என்றேன்  மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை  வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்  இல்லாததை இருப்பதாகப் பொய்ப் புகழ் சொன்ன எனக்குப் புரவலனும் இல்லை என்றான்.

எத்தகைய மரணம் பேறு பெற்றது?

 ஈழத்துக் கவிஞர் க. சச்சிதானம் வரிகளை நீங்கள் கேட்டதில்லையா? சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும் எற்றன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்

கவிதைக்கு ஒரு இலக்கணம் தருக?

 வார்த்தைகளின் வாமன அவதாரம் 

பாரதியை இன்றைய இளைய சமுதாயம் வாசிக்கிறார்களா?

 ஒரு வாலிபன் இப்படியாக ஒரு கவிதையை வாசித்தான். இக்கவிதை ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதியது என்று பிறகு தெரிந்துகொண்டேன்.  தனியொரு மனிதனுக்குக்  காதலி இல்லையெனில்  காதலை அழித்திடுவோம். 

எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய முதல் பண்பு?

யானை சமூகமென்றால் அதைக் கையாள்பவன் எழுத்தாளன். ஒரு யானைப் பாகனுக்கு முதலில் இருக்க வேண்டியது மனதைரியம். 

குழந்தைக்கும் பெரியவர்களுக்குமான ஒரு கவிதை

  கிளி வளர்த்தேன்  பறந்துவிட்டது. அணில் வளர்த்தேன்  ஓடி விட்டது. மரம் வளர்த்தேன்  இரண்டும் வந்து சேர்ந்து விட்டன. மேனாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி எ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள்.

நாவல் எழுத ஒரு ஐடியா தாருங்கள் சுரா?

 யாரோ சொன்னது. ஆனால் நாவல் எழுதுபவர்களுக்கு பயன்படும் மேற்கோள் இது. " ஒரு கதைக்கான சூழலை உருவாக்குங்கள். அதில் உங்களின் கதாபாத்திரங்களை உலவ விடுங்கள். பிறகு அவர்கள் என்ன செய்கிறார்களோ அதைப் பார்த்து எழுதுங்கள்."

ஐந்திணைக்கு புதிய வரையறை தாருங்கள் சுரா?

திரைப்படப் பாடலாசிரியர் முத்துலிங்கம் அவர்கள் ஆகஸ்ட் 18,2024 நாளிட்ட தினமணி தமிழ்மணி இதழில் எழுதியது. அப்துல் ரகுமான் ஒரு கவியரங்கத்தில் இக்கவிதையை வாசிக்க முத்துலிங்கம் ரசித்து கைக்கொட்டியதாக எழுதியிருப்பார். குறிஞ்சிகளே என் கொங்கைகள் முல்லை என் முறுவல் மருதம் என் மயிரின் சிலிர்ப்புகள் நெய்தல் என் கூந்தல் பாலை எனக்கு அடிக்கடி வந்துபோகும் வெயிற்கால வியாதி.

பகலை இரவாகவும் இரவை பகலாகவும் மாற்றும் வித்தையைச் சொல்லுங்கள்?

எம்.எம்.தீன் எழுதிய நீர்ப்பரணி நாவலில் ஒரு வைத்தியர் பேசுவதைப் போல ஓரிடத்தில் இவ்வாறு எழுதியிருப்பார். கூத்து என்பது இரவைப் பகலாக்குவது.  கூத்தி என்பவள் பகலை இரவாக்குபவள். 

ஒரு நதிக்கு எத்தனை அடி தண்ணீர் அழகு?

 நாவலாசிரியர் எம்.எம்.தீன் நீர்ப்பரணி என்றொரு நாவல் எழுதியுள்ளார். தாமிரபரணி ஆற்றின் சீற்றத்தால் கரையோர ஊர்கள் அழிந்து புதிய ஊர்கள் தோன்றியதைப் பற்றிய நாவல் இது. இந்நாவலில் பதினாறாவது அத்தியாயத்தை இவ்வாறு தொடங்குகிறார். தாமிரபரணி இருபுறமும் மணல் பாவிக்கிடக்க நடுவில் இருக்கும் மஞ்சள் மணல் விரிப்பின் மேல் மூன்றடி ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நதிக்கு மூன்றடி தண்ணீர் என்பது ஒரு கனிவான அழகைக் கொடுக்கும். இளங்கன்னி  போல எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்காது போகிற கற்புக்கரசியாகி விடுகிற நிலை. எந்த தூசியும் துரும்பும் ஓடி வராத நிலை.

அணுவினும் சிறிய துகளுக்கு என்ன பெயர்?

ஓர் அணுவை நூறு பங்காக உடைத்தால் கிடைப்பது கோண் . அதாவது நூறில் ஒரு பங்கு கோண். இச்சொல்லை கம்பர் கம்பராமாயணத்தில் ஓரிடத்தில் பயன்படுத்துகிறார். கடவுள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார் பாருங்கள்.  சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை காணுதி விரைவின்; என்றான்; நன்று எனக் கனகன் சொன்னான். 

துளியை விடவும் சிறிய துளிக்கு என்ன பெயர்?

துமி என்றொரு பெயர் இருக்கிறது. கம்பர் இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.  இலங்கையிலிருந்து சீதையை மீட்டுவர பாலம் அமைக்கிறார்கள் வானவர்கள். குமுதன் தலையில் ஒரு படை கடலில் பாலம் அமைக்கிறது. அவர்கள் கற்களைத் தூக்கி கடலில் போடுகையில் திமி தம் என்று விழுந்து தண்ணீர் துமியாக தெரிகிறது.  " குமுதன் இட்ட குலவரை கூத்தரின் 'திமிதம்' இட்டுத் திரியும் திரைக்கடல் துமி தம் ஊர் புக, வானவர் துள்ளினர் அமுதம் இன்னும் எழும் எனும் ஆசையால் "