இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருமூலர் வரிகளில் உங்களுக்குப் பிடித்தவை?

 உள்ளம் பெருங்கோயில் ஊண் உடம்பு ஆலயம்  வள்ளல் பிறனார்க்கு  வாய் கோபுர வாசல்  தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்  கள்ள புலனைந்தும் காளா மணி விளக்கே  -  திருமூலர் 

ஆசிரியர் என்பவர் யார்?

 what the teacher is, is more important than what he teaches  Kari menninger ஆசிரியர் என்பவர் அவர் என்ன கற்பிக்கிறார் என்பதை விடவும் முக்கியமானவர். 

காவிரி நீரின் ஓசையைக் கேட்டது உண்டா?

  ஆம் கேட்டிருக்கிறேன்.  அந்த ஆறு ஓடுகையில் உரல் உலக்கை இடிபடும் சத்தமும் அம்மி குழவியால் அரைபடும் சத்தமும் கேட்டிருக்கிறேன். ஏமன் என்பதால் குடியேறிய கிராமம் ஏமனூர் என்பது செவி வழிச்செய்தி. மேட்டூர் அணை கட்டுகையில் நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்த பல ஊர்களில் ஒன்று ஏமனூர். 1930 ஆம் ஆண்டு அங்கேயிருந்து வெளியேற்றப்பட்டு மேட்டு நிலத்தில் குடியேற்றப்பட்டார்கள். 840 ஏக்கர் புறம்போக்கு நிலத்தைக் காட்டி அதில் விவசாயம் செய்துகொள்ள அதிகாரிகள் கூறினார்கள். இன்று 2000 மக்கட்தொகை கொண்ட ஊராக இருக்கிறது ஏமனூர். இந்த அணைக்குள் அனுமந்தராயன் கோவிலும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலையையும் காண முடியும். தற்போது இந்த ஊரைவிட்டு போகச்சொல்லி அதிகாரிகள் கேட்கிறார்கள். காரணம் 1997 ஆம் ஆண்டு அன்றைய பொன்னாகரம் வட்டாட்சியர் எமனூர் மக்களுக்கு 464 வீட்டுமனை பட்டாக்கள் கொடுத்துள்ளார். அந்த பட்டாக்கள் செல்லாது என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது . 

அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதால் என்ன பயன்?

 இக்கட்டுரை ஔவை அருள் அவர்கள் செப்டம்பர் 5,2024 நாளிட்ட தினமணி இதழுக்கு எழுதிய கட்டுரை அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞன் உலகப் பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள், அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது. மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின் நிலையான சொத்தாகவே நிலவி வருகிறது. அறிவென்பது பொதுவாயினும், மரபுரிமை ஒன்றால் மட்டும் அது மங்கிவிடக் கூடாதென்ற பெருநோக்கும் பெருந்தகைமையும் கொண்ட தமிழ்நாடு அரசால் விளைந்த அறிவுத் திருப்பணியே நாட்டுடைமை ஆகும். தொன்மைக் காலம்தொட்டே, தமிழர் அறிவின்மீதும், கல்வியின்மீதும் எல்லையில்லா வேட்கையுடையவர்கள் என்பதை உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே (புறம்.183), விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல், கற்றா ரோடேனை யவர் (குறள் 410) பிச்சைபுகினும் கற்கை நன்றே (வெற்றி வேற்கை15) என்ற...